html

Thursday 6 December 2012

மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாகும். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது.
இதன் முகப்பு நான்கு தனித் தூண்களையும் அவற்றின் இரு புறமும் பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் அதிட்டானம் காணப்படவில்லை. ஆனால் உயரமாக அமைந்துள்ள மண்டபத்துக்குள் செல்வதற்காக இரண்டு பக்கமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.



























































































மூன்று கருவறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குடைவரையின் நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் பெரும்பாலான பல்லவர் கோயில்களில் காணப்படுவதுபோலச் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் லிங்கம் பொருத்துவதற்கான குழி காணப்படுகின்றது. இக்கருவறைக்கு இருபுறமும் காணப்படும் கருவறைகளில், தெற்குப் பக்கத்தில் உள்ளது சிவபிரானுக்கு என அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மூன்றாவது கருவறையில் முற்றுப் பெற்ற சிற்பங்கள் எதுவும் காணப் படாவிட்டாலும், சிற்பங்கள் செதுக்கப்பட இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. இக்கருவறை திருமாலுக்கு உரியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நடுவிலுள்ள கருவறைக்கு முன்னால், குடைவரையின் உள்ளேயே, இரண்டு சிம்மத்தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பக்கச் சுவரொன்றில் செதுக்கப்பட்டுள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் இக் குடைவரைக்குரிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம், மாமல்லபுரத்திலுள்ள பரவலாக அறியப்பட்ட சிற்பங்களுள் ஒன்று.
இதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

Wednesday 5 December 2012

மாமல்லபுரம் கடற்கரை அழகு

மாமல்லபுரம் கடற்கரை கோவில் தொடர்ச்சி


























































































































































ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் குகைக் கோவில்களை கொண்டது என்று  சொல்லப்பட்டுள்ளது அதேப்போலஇத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருகிறது.. இப்ப உள்ளவை தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு உண்டு.

மாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில்2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் முதல் மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தியாசமான,படிவங்கள், பழங்கால .பொருட்கள், பாறைகள்,கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருகிறது.


இங்கே  எடுக்கப்பட்ட கல்வெட்டு மாதிரிகளிலிருந்து தமிழகத்தை ஏற்கனவே இதுவரை மூன்று முறை ஆழிப் பேரலை தாக்கியிருப்பதற்கான அடையாளங்கள் இங்கு கிடைதிருப்பதாக தொல்பொருள் துறையினர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமா இருந்ததாஇல்ல கோட்டை போன்ற அமைப்பா? என்று  ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்ல வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


மாமல்லபுரம் கடற்கரை கோவில்